Skip to main content

Posts

Showing posts from January, 2026

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேசம் கண்டல்குடா மதனியா பாடல் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வு நடைபெற்றது(10-01.2026)ம் திகதி நடைபெற்றது. இதன்போது அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பரிசுப்பொருட்களையும் பொது சமூக சேவைகள் அமைப்பினரால்(PSSO) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் தாகிர் ஹம்சார் அன்சார் மௌலவி அவர்களும், நிறுவனத்தின் கல்வி மற்றும் விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் சியாத் அவர்களும் கலந்து கொண்டதோடு இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகத்தினர்கள் முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியைகளும் பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.       செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 11/01/2026

நூரானியா குர்ஆன் மத்ரசாவின் வருடாந்த கலை விழா

 ஆலங்குடா முல்லை-B பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நூரானியா குர்ஆன் மத்ரசா மாணவர்களுக்கான வருடாந்த கலை நிகழ்ச்சி 10/01/2026ம் திகதி நடைபெற்றது.       இந் நிகழ்வில் குர் ஆன் மத்iரஸா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பலதும் நடைபெற்றது.         இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இஸ்லாமிய கலாச்சார புத்தள மாவட்டத்துக்கான பணிப்பாளர் இப்ஹாம்(நளீமி) அவர்கள் கலந்துகொண்டார் .அவரோடு    அதிதிகளாக நுரைச்சோலை இப்றாஹிமியா அரபுக்கல்லூரியின் ஸ்தாபகர் முபாரக் மொளவியும்(ரசூலி) நுரைச்சோலை போக்குவரத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளும்,  ஆலங்குடாவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சனூன் அவர்களும் கலந்துகொண்டர்.    அவர்களுடன் ஆலங்குடா பள்ளி நிர்வாகங்களின் தலைவர்களும்  கலந்துகொண்டனர்.    கிராம மக்களின் பூரனஒத்துழைப்புடன் இந் நிகழ்வுகள்யாவும் நடைபெற்றது.      இந்த நிகழ்வினை நூரானியா பள்ளி பேஷ் இமாம் றஹிமூதீன்(அமானி) அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. தலைமைதாங்கினார்.               11/01...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் இன்று (09/01/2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நோயாளிகள், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். இதனால் அவர்கள் பெரும் பிரயாண மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலைக்கு தீர்வாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். எச். எம். அஸாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரின் சேவையில் இந்த கிளினிக் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட கிளினிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்கள் இன்று (09/01/2026) ஆரம்பித்து வைத்தார். 👨‍⚕️👩‍⚕️ இந்நிகழ்வில் ▪️ மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் – டாக்டர் எம். எச். எம். அஸாத் ▪️ நரம்பியல் சத்த...

ஜனாதிபதி தலைமையில் 5Mவேலைத்திட்டம் ஆரம்பம்

 இன்று (09/01/2026) ராஜாங்கனை, விகாரைக்கு அருகில் நடைபெற்ற அனுராதபுர மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மஹவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லேவ, மிஹிந்தலை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ் உள்ள பிரதான வேலைத்திட்டமாக இந்த வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, அனர்த்தத்திற்குப் பிறகு, இருந்ததை விட சிறந்த நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டத்தை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டினார். மேலும், மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், போதுமான வருமானம், பிளைகளுக்கு தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்ல வீடு, அத்துடன் மன அமைதியும் அவசியம் என்று சுட்டிக்காட்டியதுடன், அரசாங்கம் இதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் பெற்றோருக்கு சுமையாக இல்லாத, பிள்ளைகளுக்கு...

இலங்கை பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2து 20/20போட்டி இன்று

 இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட 20/20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி 07/01/2026இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.   ஏற்கனவே இந்த தொடரில் முதலாவது போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இலங்கை அணியை பொறுத்தமட்டில் இந்த போட்டியானது இந்த தொடரில் ஒரு முக்கியமான போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் 09/01/2026 செய்தித்தொகுப்பு:-_தாஜூன் ஆசிக்

கண்டக்குழி கடற்கரை சுற்றுலாப் பாதை முழுமையாக காபட் வீதியாக பூரணப்படுத்தப்பட்டது!

 கல்பிட்டி பிராந்தியத்தின் சுற்றுலாத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் கண்டக்குழி கடற்கரைக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அதன் இறுதிப் பகுதி வீதி அபிவிருத்திப் பணிகளும் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கண்டக்குழி கடற்கரை வீதி காபட் செய்யப்பட்டு இருந்த போதிலும், குறிஞ்சிப்பிட்டி டானியா ஹோட்டல் அருகாமையில் இருந்து கடற்கரை வீதியுடன் இணையும் சுமார் 200 மீட்டர் தூரம் சீரமைக்கப்படாமல் இருந்தது. சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் பெரும் சவாலாக இருந்த இந்தப் பகுதியும் தற்போது முழுமையாக காபட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் (World Bank) நிதி உதவியுடன், கல்பிட்டி பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்டக்குழி கடற்கரைக்கு செல்லும் அனைத்து வீதிகளும் இப்போது சீரான போக்குவரத்து நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எமது பிரதேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் சுற்றுலாத் துறைக்கு வலுசேர்க்கும் வகையில், இத்திட்டத்தை முன்னெடுக்க ஒத்துழைத்த அனைத்து அதிகாரிகளுக்கு...

ஆசஷ் தொடரில் 4-1 அடிப்படையில் தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேயா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆசஷ்த்தொடர் 2025/2026 நடைபெற்று முடிந்தது இறுதிப்போட்டியானது 07/01/26 முடிவடைந்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 384ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது      இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்    ஜோ ரூட் 160   ஹரி பூரூக் 84 ஜமி சிமித் 46 வில் ஜக் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.      அவுஸ்திரேலியவின் பந்து வீச்சில்      நேசர் 4      போலன்    2          மிச்சல்ஸ்டாக்2    விக்கெட்டையும் கைப்பற்றினர்.      தனது முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்     ஹேட் 163     ஸ்டீவ் ஸ்மீத் 148      நேசர் 24      லபூச்சானே 48 ஓட்டங்கை பெற அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 567/10 விக்கெட்டையும் இழந்து வலுவான நிலையில் இருந்தது      இங்கிலாந்து சார்பாக பந்து வீச்சில்    பிரைடி கார்ஸ்-3  ...

ஜனநாயகன் பொங்கள் அன்று வெளியிடப்படாது.

 இந்தியாவின் தமிழ் நாட்டைச்சேர்ந்த நடிகர் விஜய் நடித்து எதிர் வரும் பொங்கள் தினத்தன்று வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது உரிய அனுமதிகள் இன்னும் கிடைக்காத காரணத்தினால் இந்த படம் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  நடிகர் விஜயின் இறுதிப்படம் என்பதால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது தற்ப்போது படம் வெளியாகாது என்பதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் கட்சித்தொண்டர்களும் மிகவும் கவல்லையடைந்துள்ளனர்.  எதுவாக இருப்பினும் படத்துக்கான உரிய அனுமதி கிடைகவுடன் நிச்சயமாக படம் வெளியாகும் என படக்குழு செய்தி வெளியிட்டுள்ள்து          08/01/2026 செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்

முதலாவது போட்டியில் வெற்றிபெற்றது பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி

   இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட 20/20போட்டித்தொடரில் முதலாவது போட்டி இன்று தம்புள்ளயில் நடைபெற்றது.   நாணயசுழற்ச்சியில் வெற்ற பெற்ற பாக்கிஸ்தான் அணித்தலைவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.     முதலில் துடுப்பெடுத்தாட சென்ற இலங்கை அணி ஆரம்பதுடுப்பெடுத்தாட்ட வீரர்களில் ஆரம்பம் சரியாக அமையாதனால் ஆரம்பத்திலே பாக்கிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள்.      இலங்கை அணிசார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் முன்னனி வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை என்றுதான் கூறவேண்டும் இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் அதிகபட்சமாக   ஜனித் லியானகே 40    சரித் அலங்க 18   வனிந்து ஹசரங்க 12    பத்தும் நிசங்க 12    தசுன் சானக்க 12 ஓட்டங்களை பெற்றனர் 10விக்கெட்டுகளை இழந்து 128ஓட்டங்ககை பெற்றது இலங்கை அணி.    பாக்கிஸ்தான் பந்துவீச்சு சார்பாக  சல்மான் மிர்சா   3  அப்ரார் அஹமட் 3  சதாப் கான்.          2 ...

6ஆம் தர பாடப்புத்தக உள்ளடக்க விவகாரம் தற்செயலானது அல்ல. திட்டமிடப்பட்டது - இம்ரான் எம்.பி

6ஆம் தர பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்லது. அது திட்டமிடப்பட்டு சேர்க்கப்பட்டது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஒரு பாடப்புத்தகம் பலரது தொடர்புகளைத் தாண்டியே வெளிவருகின்றது. எழுத்தாளர்குழு, தட்டச்சு செய்வோர், பக்க வடிவமைப்பாளர்கள், புரூவ் பார்வையாளர், இணைப்பளார்கள், பணிப்பாளர், மேற்பார்வையாளர் எனப்பலரது தொடர்புகளைத் தாண்டித் தான் ஒரு பாடப் புத்தகம் வெளிவருகின்றது. இந்த விடயங்களை புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களில் நாம் காணலாம். இந்நிலையில் ஒருபுத்தகத்தில் எந்தவொரு விடயத்தையும் யாரும் தனிப்பட்ட ரீதியில் இடையில் செருக முடியாது என்பது தெளிவாகின்றது. இந்த வகையில் நோக்கும் போது 6 ஆம் தரப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்ல. அது திட்டமிட்ட அடிப்படையில் சேர்க்கப்பட்டதே என்பது தெளிவாகின்றது. நமது நாட்டுக்கென்று சிறந்த கலாசார பாரம்பரியங்கள் இருக்கின்றன. இந்தக் கலாசாரங்களை சிதைப்பதற்கு இந்த அரசாங்கம...

பாடசாலைக்கு அதிபர் இல்லை.

புத்தளம்,கற்பிட்டி பகுதியில் இருக்கும் பாடசாலையான நிர்மலாமாதா பாடசாலைக்கு நிரந்தரமான அதிபர் இல்லாததன் காரணமாக 07/01/2026 இன்று கற்பிட்டி கோட்டக்கல்வி அலுவலகத்திற்க்கு முன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள்,பாடசாலை அபிவிருத்திகுழு உறுப்பினர்கள்,பாடசாலையின் பழையமாணவர்களினால் இந்த விடையம் கோட்டக்கல்வி பணிப்பாளரின் கவனத்துக்கொண்டு வரப்பட்டது பின்னர் இது சம்மந்தமாக மக்களின் சார்பாக பணிபாளர் அவர்களுக்கும் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.           07/01/2026 செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்

பாக்கிஸ்தான் அணியுடனா T20தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியானது

 இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான் 3போட்டிகள் கொண்ட 20/20தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது   இதில் அணித்தலைவராக டசுன் ஷானக்கா  தலைமை தாங்குகிறார்.                                  1 தசுன் ஷானக 2 பத்தும் நிசங்க 3 கமிந்து மிசாரா 4 குசல் மெண்டிஸ் 5 குசல் பெரேரா 6 லலித் லியானகே 7 சரித் அசலங்கா 8 வனிந்து ஹசரங்கா 9 துனித் வெல்லாலகே 10 மஹேஷ் தீக்சனா 11துசான் ஹேமந்த 12 தர்வீன் மெத்தீவ் 13 துஷ்மந்த சமீர 14 மதீச பத்திரன் 15நுவான் தூசார 16 எசான் மலிங்கா 17 ஹமில மிஷ்ஹாரா 18 ஹமிந்து மெண்டிஸ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.                                       06/01/2026 செய்தித்தொகுப்பு:-THAJUDEEN Aasik

ஆசஷ் 5து போட்டியில் 385ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து அணி

 ஆசஷ் 5து போட்டியில் 385ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து அணி   அவுஸ்திரேயா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆசஷ்த்தொடரில் 5து போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 384ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் நேர்த்தியான ஆட்டமின்மையால் 35ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்தது.            அவுஸ்திரேலியாவின் துடுப்பெடுத்தாட்ட வரிசை பின்வருமாறு அமைந்தது சக் குரவ்லி 16 டக்கட் 26 ஜொகப் பெதல் 10 ரூட் 160 ஹரி பூரூக் 84 ஸ்டோக்ஸ் 0 Jசிமித் 46 வில் ஜக்27 கார்ஸ் 1 டொங்கோ 1     என்ற ஓட்ட விகிதத்தில் அவுஸ்திரேலியாவின் துடுப்பெடுத்தாட்டம் அமைந்திருந்தது.     இங்கிலாந்து சார்பாக பந்த்து வீச்வில் நெசர் 4விக்கெட்டையும் ஸ்டார்க்,போலண்ட தலா 2விகெட்டையும் கைப்பற்றினர் செய்தி தொகுப்பு:-THAJUDEEN Aasik

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வந்தது

  இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட T20தொடர் ஜனவரி 07,09,11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.   எனவே இதில் பங்குகொள்ள பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இலங்கை வந்தடைந்தது.     05/01/2026

புதிய தாய்,சேய் நிலையம் திறப்பு.

 05/01/2026  கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட நுரைச்சோலை, கொய்யாவாடி அரபா நகர் கிராமத்தில் புதிய தாய் - சேய் பராமரிப்பு நிலையம் (Maternity and Child Clinic)  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதில் கற்பிட்டி பிரதேசசபைத்தலைவர் ASMறிகாஸ், புத்தளம் பா,உ பைசல்,கற்பிட்டி (பி தே உ) முசம்மில் கற்பிட்டி MOH வைத்தியர் உடபட. கிராமமக்களும் கலந்துகொண்டனர்.

இலவச புத்தகப்பை வழங்கள்

 05/01/2026 இன்று  பிரபல சமூகசேவையாளர் #முஜாஹித்_நிசார் அவர்களினூடாக ஆண்டாங்கேனி,தாய்ப் நகர் பாலர் பாடசாலையில் 2026ம் வருடம் இணைந்த மாணவச்செல்வங்களுக்கான புத்தகப்பை  அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.