மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் இன்று (09/01/2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரை நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நோயாளிகள், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். இதனால் அவர்கள் பெரும் பிரயாண மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்த நிலைக்கு தீர்வாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். எச். எம். அஸாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரின் சேவையில் இந்த கிளினிக் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கிளினிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்கள் இன்று (09/01/2026) ஆரம்பித்து வைத்தார்.
👨⚕️👩⚕️ இந்நிகழ்வில்
▪️ மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் – டாக்டர் எம். எச். எம். அஸாத்
▪️ நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம். பிரியதர்ஷன்
▪️ சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எஸ். தர்சன்
▪️ வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
📅 ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விசேட கிளினிக் சேவையை, பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர் கேட்டுக்கொள்கின்றார்.
தகவல்:- (mannar bhfb)



Comments
Post a Comment