Skip to main content

Posts

ஆலங்குடா பாடசாலையில் இருந்து பல்கழைக்கழகம் தெரிவான மாணவர்களின் விபரம்

புத்தளம்,ஆலஙகுடா பாடசாலையில் இருந்து 2024/2025வருடத்துக்கு கல்வி பொதுத்தராதர பரீட்சையின் மூலமாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களின் விபரம் வெளியானது. இதில் 2மாணவிகள் முகாமைத்துவ பீடம் வவுனியாவுக்கும் 1மாணவி கொழும்பு பல்கழைக்கழகத்துக்கும் 2மேலும் இரண்டு மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் தெரிவாகியுள்ளார்கள்.    தகவல்:-பாடசாலை முகனூல்
Recent posts

பாடசாலை கரப்பந்தாட்ட அணிக்கு Jersey அன்பளிப்பு

 பாடசாலை கரப்பந்தாட்ட அணிக்கு Jersey அன்பளிப்பு ==================== திகழி பாடசாலையின் 20 வயதின் கீழ் கரப்பந்தாட்ட அணி நாளை (2025.08.03) மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. எனவே இதற்கான Jersey ஐ முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் NTM தாஹிர் அவர்கள் தனது சொந்த நிதியின் மூலம் வழங்கி வைத்தார். இன்று Jersey ஐ பாடசாலை அதிபர் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர். முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் NTM தாஹிர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. தகவல்:-பவுஸ்கான்(திகழி) 02/08/2025

உலமாக்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

உலமாக்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டி  ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 26/07/2025ம் திகதி ஆலங்குடா மெல்போன் மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படு இருந்தது இந்த தொடரில் கற்பிட்டி,திகழி,முதலைப்பாளி, ஆலங்குடா ஆகிய பிரதேசங்களில் இருந்து 6அணிகள் பங்குபற்றின இதில் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி -B உலமாக்கள் அணி மற்றும் திகழி உலமாக்கால் அணி தகுதிபெற்றது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கல்பிட்டி-b உலமாக்கள் அணியை வீழ்த்தி திகழி உலமாக்கள் அணி வெற்றி பெற்றது. டி.எம்.ஆசிக்
 சிலாவத்துறை பஸ் நிலையம் மாற்றியமைக்கப்பட வேண்டும் முசலிப் பிரதேசத்திற்கான பிரதான பஸ் நிலையமொன்று 2009 யுத்த முடிவில் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் சிலாவத்துறையில் அமைக்கப்பட்டது. எனினும் அந்த பஸ் நிலையம் எவ்வித அடிப்படைத் திட்டமுமின்றி மக்கள் பயன்படுத்த முடியாத ஓர் இடத்தில் அமையப் பெற்றுள்ளது. பஸ்கள் அங்கு வந்து செல்வதற்கான நடைமுறைச் சாத்தியமில்லை. அந்த பஸ் நிலையம் வேளாண்மை காலங்களில் நெல் காயப்போடும் ஒரு அனுகூலமான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் அதேவேளை அதிக இரவு நேரங்களில் மாட்டுத் தொழுவமாகவும் போதைப்பொருள் பாவிக்கும் இடமாகவும் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறனர்.  மக்கள் அதிகம் கூடுகின்ற, நடமாடுகின்ற, வந்து செல்லக்கூடிய. இடத்திலேயே ஒரு பிரதேசத்திற்கான பஸ் நிலையம் அமையப்பெற வேண்டும். சிலாவத்துறை சந்தியைச் சூழவுள்ள வைத்தியசாலை, வங்கி உட்பட்ட பல்வேறு அரச அலுவலகங்கள், வர்த்தக நிலையங்களில் மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு பஸ் நிலையம் வந்து பஸ் மூலம் தமது கிராமத்துக்கு இலகுவாகச் செல்வதற்கான ஒரு பஸ் நிலையம் சிலாவத்துறைச் சந்தியிலேயே அமைக்கப்பட வேண்டும்.  (ந...

நுரைச்சோலையில் இஞ்சி வைத்திருந்தவர் கைது

 நுரைச்சோலை பகுதியில் 2828 கிலோ கிராம் சட்டவிரோத இஞ்சி பறிமுதல்! நுரைச்சோலை சஞ்சிதவத்தை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மூடைகளில்  2828 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 33 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினருடனும், நுரைச்சோலை பொலிஸாருடனும் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீடுகளில் வலைவீச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகவல்களின்படி, இவ்வாறு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் இஞ்சி இந்தியாவில் இருந்து கடல் வழியாகப் பதுக்கப்படுவதாகவும், இது சிறந்த லாபம் தரும் குற்றவியல் வணிகமாக மாறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேகநபரும் சட்ட நடவடிக்கைக்காக நுரைச்சோலை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். 20/07/25

மன்னார் இளைஞசன் விமானி

 மன்னார் - விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார். தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்று,  ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார். ATPL ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமத்தை பெற்றுள்ளார். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிக தரமான உரிமமாக இருப்பதுடன் இவ்வுரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain) பணியாற்ற முடிகிறது. விமானியாக...

காணி விடுவிக்க உத்தரவு

 வர்த்தமானிகளின் மூலம் வனலாகா கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க உடனடி உத்தரவு. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.  கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஶ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  கந்தசாமி பிரபு,  ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி  (பா.உ) கலந்துகொண்டார். இதன்போது, சுற்றாடல்  அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப...