Skip to main content

Posts

நுரைச்சோலையில் இஞ்சி வைத்திருந்தவர் கைது

 நுரைச்சோலை பகுதியில் 2828 கிலோ கிராம் சட்டவிரோத இஞ்சி பறிமுதல்! நுரைச்சோலை சஞ்சிதவத்தை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மூடைகளில்  2828 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 33 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினருடனும், நுரைச்சோலை பொலிஸாருடனும் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீடுகளில் வலைவீச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகவல்களின்படி, இவ்வாறு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் இஞ்சி இந்தியாவில் இருந்து கடல் வழியாகப் பதுக்கப்படுவதாகவும், இது சிறந்த லாபம் தரும் குற்றவியல் வணிகமாக மாறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேகநபரும் சட்ட நடவடிக்கைக்காக நுரைச்சோலை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். 20/07/25
Recent posts

மன்னார் இளைஞசன் விமானி

 மன்னார் - விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார். தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்று,  ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார். ATPL ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமத்தை பெற்றுள்ளார். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிக தரமான உரிமமாக இருப்பதுடன் இவ்வுரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain) பணியாற்ற முடிகிறது. விமானியாக...

காணி விடுவிக்க உத்தரவு

 வர்த்தமானிகளின் மூலம் வனலாகா கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க உடனடி உத்தரவு. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.  கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஶ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  கந்தசாமி பிரபு,  ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி  (பா.உ) கலந்துகொண்டார். இதன்போது, சுற்றாடல்  அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப...

இந்தியாவின் முயற்சியை இறுதியில் தடுத்த ஸ்பின்

   திரில் வெற்றியை பெற்றது இங்கிலாந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3து டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது T .m.ஆசிக் இங்கிலாந்து சார்பாக ரூட் 104 பிரைடின் கேர்ஸ் 56  போப், ஸ்டோகஸ் தலா 44 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற 387 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களை இழந்தது இந்தியா சார்பில் பந்துவீச்சில் பும்ராஹ் -5 சிராஜ்,நிதிஷ் ரெட்டி தலா 2 ஜடேஜா -1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள். தனது முதலாவது இன்னிங்க்ஸ் துடுப்பெடுத்தாட சென்ற இந்திய அணி இங்கிலாந்தைப்போல 387ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது  இந்தியா சார்பாக அதிகபட்சமாக ராகுல்-100 ரிசப் பண்ட் -74 ஜடெஜா-72 ஓட்டங்களைப்பெற்றனர். இங்கிலாந்து சார்பாக பந்து வீச்சில் கிரிஸ் வோக்ஸ்-3 ஆச்சர்,ஸ்டோக்ஸ் தலா 2 கேர்ஸ்,பசீர் தலா 1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள். மீண்டும் தனது 2து இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது 190ஓட்டங்களுக்க...

Abacusயினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சி

 ICAM Abacus கல்பிட்டி கிளையினால் நடத்தப்பட்ட *Regional Abacus Speed Maths Competition* ஜூலை 10 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆலங்குடா Eye Institute இல்  வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ஆலங்குடா, திகழி, பள்ளிவாசல்துறை, கண்டல்குளி மற்றும் கல்பிட்டி ஆகிய கிளைகளிலிருந்தும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .  போட்டி நடைபெற்றதினத்திலே வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ICAM abacus பெயர் பொதிக்கப்பட்ட purse வழங்கப்பட்டது.. இந்நாளை வெற்றிகரமாக கழிக்கச்செய்த ICAM Abacus kalpity branch ஆசிரியைகளுக்கும் , Eye Institute க்கும்  நன்றியை தெரிவித்தனர். ஏற்பாட்டுக்குழுவினர். தகவல்:-The area Manger Alankuda Coaching Center 11/07/2025

இம்ரான் மஹ்ரூப் உயிர் அச்சுருத்தலா?

 குச்சவெளி ,புல்மோட்டை பிரதேச ACMC முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ACMC க்கு ஆதரவு வழங்காத காரணத்தால் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில ACMC முக்கியஸ்தர்கள் மற்றும் சில ACMC ஆதரவாளர்கள்  தனக்கு சமூக வலைத்தளம் ஊடாகவும் ஏனைய வழிகளிலும் உயிர் அசச்சுறுத்தல் விடுத்ததாகவும் தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்ததாகவு. எனவே அவர்களுக்கு எதிராக நேற்று(8)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தனது முறைபாட்டையும் பதிவு செய்துள்ளார் அத்துடன் தனது சட்டதரணி ஊடாக அவர்களுக்கு எதிரான  சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும்,தெரிவித்துள்ளார். தகவல் :-இம்ரான் மஹ்ரூப் முகனுல் 10/07/2025

தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

 இலங்கை  மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்மானமிக்க போட்டியில் வெற்றிபெற்றது இலங்கை அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் போட்டியில் 2-1அடிப்படையில் வெற்றிகொண்டது இலங்கை அணி 1-1என்ற அடிப்படையில் சமநிலையில் இருந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று 8/7/2025 கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது   நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது    இலங்கை சார்பாக பத்தும் நிசாங்க 34 குசல் மெண்டிஸ்-124 அசலங்க 54   அதிக பட்சமாக பெற இலங்கை 7விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப்பெற்றது . பங்களாதேஷ் பந்துவீச்சு சார்பாக தஸ்கின் அஹமட்,மஹ்தி ஹசன் தலா 2விக்கெட்டையும், தன்சீம்,தன்விர் இஸ்லாம்,ஹொசைன் ஆகியோர் தலா 1விக்கெட்டையும் பெற்றனர்.  285என்ற வெற்றி இலக்கை நோக்கித்துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 186 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது பங்களாதேஷ் சார்பக  தவ்டி ஹரிடி 58  பர்வீஸ் ஹூசைன்28 மஹ்தி ஹசன்28 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர்.  இலங்கை சார்பாக பந்து வீச்ச...