Skip to main content

ACTIVE KIDS KINDERGARTEN ALANKUDA வின் *Tiny* *Titans* *சிறிய* *கைகள்* *பெரிய* *சாகசங்கள்*

 

2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏.

பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது. 

மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர்.

குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏற்பாடு செய்யப்பட்டது.







செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக்

16/01/2026

Comments

Popular posts from this blog

Abacusயினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சி

 ICAM Abacus கல்பிட்டி கிளையினால் நடத்தப்பட்ட *Regional Abacus Speed Maths Competition* ஜூலை 10 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆலங்குடா Eye Institute இல்  வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ஆலங்குடா, திகழி, பள்ளிவாசல்துறை, கண்டல்குளி மற்றும் கல்பிட்டி ஆகிய கிளைகளிலிருந்தும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .  போட்டி நடைபெற்றதினத்திலே வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ICAM abacus பெயர் பொதிக்கப்பட்ட purse வழங்கப்பட்டது.. இந்நாளை வெற்றிகரமாக கழிக்கச்செய்த ICAM Abacus kalpity branch ஆசிரியைகளுக்கும் , Eye Institute க்கும்  நன்றியை தெரிவித்தனர். ஏற்பாட்டுக்குழுவினர். தகவல்:-The area Manger Alankuda Coaching Center 11/07/2025

நூரானியா குர்ஆன் மத்ரசாவின் வருடாந்த கலை விழா

 ஆலங்குடா முல்லை-B பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நூரானியா குர்ஆன் மத்ரசா மாணவர்களுக்கான வருடாந்த கலை நிகழ்ச்சி 10/01/2026ம் திகதி நடைபெற்றது.       இந் நிகழ்வில் குர் ஆன் மத்iரஸா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பலதும் நடைபெற்றது.         இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இஸ்லாமிய கலாச்சார புத்தள மாவட்டத்துக்கான பணிப்பாளர் இப்ஹாம்(நளீமி) அவர்கள் கலந்துகொண்டார் .அவரோடு    அதிதிகளாக நுரைச்சோலை இப்றாஹிமியா அரபுக்கல்லூரியின் ஸ்தாபகர் முபாரக் மொளவியும்(ரசூலி) நுரைச்சோலை போக்குவரத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளும்,  ஆலங்குடாவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சனூன் அவர்களும் கலந்துகொண்டர்.    அவர்களுடன் ஆலங்குடா பள்ளி நிர்வாகங்களின் தலைவர்களும்  கலந்துகொண்டனர்.    கிராம மக்களின் பூரனஒத்துழைப்புடன் இந் நிகழ்வுகள்யாவும் நடைபெற்றது.      இந்த நிகழ்வினை நூரானியா பள்ளி பேஷ் இமாம் றஹிமூதீன்(அமானி) அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. தலைமைதாங்கினார்.               11/01...